ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு... ஆத்திரத்தில் முதியவரை கொடூமாக கொன்ற இளைஞர்.. பரபரப்பு வாக்குமூலம்..!
தேனியில் ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த முதியவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனியில் ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த முதியவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் வசித்துவந்த பொன்ராம் (75) என்ற முதியவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவ்வரது வீட்டுப் படுக்கையறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், யாரோ ஒருவர் தனது தந்தையை கொலை செய்திருக்கலாம் எனக் கூறி, தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, பொன்ராமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், முதியவர் பொன்ராம், கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பொன்ராமின் வீட்டிற்கு அடிக்கடி வரும் அருண்குமார் (26) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து விசாரித்ததில், அவர் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அருண்குமாரும், அவரது நண்பர் ஒருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்ததும், அந்த நண்பருக்கு திருமணம் ஆனதால், பொன்ராமிடம் அருண்குமார் பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று, இரவு, குடிபோதையில் பொன்ராம் வீட்டிற்கு வந்துள்ளார் அருண்குமார். அப்போது பொன்ராமிடம் ஓரினச்சேர்க்கை செய்ய முயலவே, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து, பொன்ராமின் கழுத்தை நெருத்திக் கொலை செய்ததாதகவும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அருண்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.