Asianet News TamilAsianet News Tamil

72 வயதில் ஆபாச படத்துடன் அலைந்த கிழவன்..! கல்லூரி மாணவிகளிடம் காட்டி காவல்துறையில் சிக்கினார்..!

சூளைமேட்டைச் சேர்ந்த மோகன் என்கிற முதியவர் கல்லூரி மாணவி ஒருவருக்கு குழந்தைகள் ஆபாச படத்தை ஐ பேடில் காட்டியதாக புகார் வந்ததை அடுத்து ஆயிரம் விளக்கு காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

72 year old man arrested under pocso act
Author
Chennai, First Published Dec 24, 2019, 5:07 PM IST

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

72 year old man arrested under pocso act

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

72 year old man arrested under pocso act

ஆபாச படத்தை பரப்பியது தொடர்பாக முதன்முதலாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற மெக்கானிக் கைது செய்யபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது சென்னையில் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூளைமேட்டைச் சேர்ந்த மோகன் என்கிற முதியவர் கல்லூரி மாணவிகளிடம் குழந்தைகள் ஆபாச படத்தை ஐ பேடில் காட்டியதாக புகார் வந்ததை அடுத்து ஆயிரம் விளக்கு காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios