Asianet News TamilAsianet News Tamil

70க்கும் மேற்பட்ட பெண்களுடன் பலாத்கார ஆபாச வீடியோ... கணவன் கண்முன்னே பலவந்த செக்ஸ்!! சென்னையில் பகீர்...

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இரவு நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு சென்று நகை, பணம் பறித்து மேலும் அவர்களை பலாத்காரம் செய்து வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான் அந்த கொடூரமான கொள்ளையன்.  அந்த பெண்களுடன் நடந்து கொண்ட போது, பதிவு செய்த வீடியோவை வைத்து ரசித்தும் வந்துள்ளான். அந்த
காமக் கொடூரன் சிக்கியது எப்படி?  

70 women harassment mobile video ou
Author
Chennai, First Published Mar 9, 2019, 4:03 PM IST

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இரவு நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு சென்று நகை, பணம் பறித்து மேலும் அவர்களை பலாத்காரம் செய்து வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான் அந்த கொடூரமான கொள்ளையன்.  அந்த பெண்களுடன் நடந்து கொண்ட போது, பதிவு செய்த வீடியோவை வைத்து ரசித்தும் வந்துள்ளான். அந்த 
காமக் கொடூரன் சிக்கியது எப்படி?  

சென்னை அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் இளம்பெண்கள் கல்யாணமான இல்லத்தரசிகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு அடுத்தடுத்து புகார் வந்துகொண்டே இருந்துள்ளது.

பெண்களை மிரட்டி நகை, பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும், கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரு இளைஞர் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. பெண்களை மிரட்டியும் வலுகட்டாயமாக உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளான் அந்த காம வெறி பிடித்த திருடன். 

இதுகுறித்து புகாரும் வந்ததால் போலீசார் அவரை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். அமைத்தபோது அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் கிடுக்குப் பிடி கேள்விகளால் முன்னுக்கு பின் பதில் அளித்தால், அவரிடம் உள்ள விலை உயர்ந்த மொபைல் போனை வாங்கி சோதனை செய்ததில் 70க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோவும் இருந்தது. மேலும், பெண்களுடன் அனைத்து வீடியோக்களிலும் அந்த அவனே இருந்ததால், அவனை  தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பணம் நகை பறித்தது மட்டும் இல்லாமல். வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்துள்ளார். மேலும் உல்லாசமாக இருக்கும் சமயத்தில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான்.

அந்த காமக்கொடூர திருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரை சேர்ந்த அறிவழகன். மேலும் அவர் பெங்களூரில் சாப்ட்வேர் இஞ்சினியராக  பணியாற்றிய போது, ஒசூரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்துவிட்டு, அங்கியிருந்து சென்னைக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது. 

வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது, கதவை தட்டியவுடன் அவர்கள் வெளியே வந்த பார்கும் போது, அவர்களை வேகமாக தள்ளி உள்ளே இழுத்து சென்று உள்பக்க லாக் செய்துவிட்டு, அவர்களை மிரட்டி பலவந்தமாக செக்ஸ் வைத்துவிட்டு,  அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு அறிவழகன்.  நகை, பணம்  திருடி சென்று விடுவான். 

அதுமட்டுமல்ல, கணவன் வீட்டில் இருக்கும் போது, எடுத்து வைத்துள்ள வீடியோவை காட்டி அந்த பெண்களை வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்து கொள்வான். குடும்பமானம் போய்விடும் என்ற பயத்தில், புகார் அளிக்காததால் அவனுக்கு வசதியாக போய் விட்டது. 

கடந்த 3 மாதத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து, அதை செல்போன் வீடியோகவும் எடுத்தும், அடுத்தடுத்து நாட்களில் 2 சாப்ட்வேர் மென்பொறியாளர் உட்பட 3 பெண்களை இதே பாணியில் மிரட்டி பலவந்த செக்ஸ் வைத்துள்ளான். 

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டில் வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் சுமார் 50 பெண்களை மிரட்டி பலவந்தமாக செக்ஸ் வைத்துள்ளான். அதுமட்டுமல்லாமல், அதை  வீடியோ எடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வந்தது. திருமணமான பெண் ஒருவர் புகார் அளித்தும், தற்போது ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. 

பிறகு வெளியேவந்தவுடன் இரு சக்கர வாகனத்தை திருடி ஆவடி, கொறட்டூர், அம்பத்தூர், எஸ்டேட் பகுதிகளில் வீடுகளையும் பெண்களையும் நோட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காமராஜர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனது கைவரியை காட்டி அறிவழகன் சுவர் ஏறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளும் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அறிவழகனுக்கு ஆதரவாக இரண்டு வழக்கறிஞர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு கொள்ளையடிக்கப்பட்ட பங்கும் வைப்பதாகவும் அவனை பிறகு ஜாமீனில் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தள்ளதாக தகவல் துறையினர் கூறுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios