Asianet News TamilAsianet News Tamil

கள்ள உறவில் அம்மா.. கேட்டு தொந்தரவு செய்த தந்தை.. பதில் சொல்ல மறுத்த 7வயது மகள் துடிதுடிக்க கொலை..!

ராதாகிருஷ்ணன், மகள் வதனாஸ்ரீயிடம், தாய் லாவண்யா யாருடன் பேசுகிறார். யாருடன் தொடர் வைத்திருக்கிறார் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு பதில் அளிக்க முடியாமல் வதனாஸ்ரீ எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

7 year old daughter murder...father Arrest
Author
Chennai, First Published Oct 31, 2021, 7:30 PM IST

சென்னை வில்லிவாக்கத்தில் தனது மனைவி மீதான நடத்தை சந்தேகத்தில் ஆத்திரமான தந்தை தனது 8 வயது மகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை வில்லிவாக்கம், செங்குன்றம் சாலையில் உள்ள 5வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). இவரது மனைவி லாவண்யா(32). அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் வதனாஸ்ரீ (7) மகன் விக்கி ராம்ஸ் ஆகியோர் உள்ளனர். அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் வதனஸ்‌ரீ 4ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்கிடையே தனது மனைவியின் நடத்தை மீது ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

7 year old daughter murder...father Arrest

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராதாகிருஷ்ணன் மனைவியை விட்டு பிரிந்து அயனாவரம் சிவகாமிபுரத்தில் உள்ள தனது தாய்வீட்டுக்கு வந்து விட்டார். லாவண்யாவின் நடத்தையில் மேலும் சந்தேகம் அடைந்த ராதாகிருஷ்ணன் தினந்தோறும் போன் மூலம் லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றும் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க;- ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து அவரது மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவால் அதிமுகவில் சலசலப்பு..!

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ராதாகிருஷ்ணன், வில்லிவாக்கம் செங்குன்றம் சாலையில் உள்ள லாவண்யாவின் வீட்டிற்கு வந்தார். ஆனால் லாவண்யா வீட்டில் இல்லை. பணிக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தார். வீட்டில் மகள் வதனாஸ்ரீ மற்றும் விக்கி ராம்ஸ் மட்டும் இருந்தனர். அப்போது ராதாகிருஷ்ணன், மகள் வதனாஸ்ரீயிடம், தாய் லாவண்யா யாருடன் பேசுகிறார். யாருடன் தொடர் வைத்திருக்கிறார் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு பதில் அளிக்க முடியாமல் வதனாஸ்ரீ எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த ராதாகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகள் வதனாஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் வதனாஸ்ரீ கீழே சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட வீட்டில் இருந்த மகன் சிறுவன் விக்கிராம்ஸ் அலறி கூச்சலிட்டான். உடனே ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்குள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது சிறுமி வதனாஸ்ரீ ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

7 year old daughter murder...father Arrest

இதையும் படிங்க;- மதுரையில் பயங்கரம்.. திருமணமான 2 நாட்களில் காதல் மனைவி கொடூரமாக எரித்து கொலை... கணவர் பகீர் வாக்குமூலம்.!

உடனடியாக வதனாஸ்ரீயை மீட்டு பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வதனாஸ்ரீ  உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வதனாஸ்ரீ உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த  ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகுின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios