Asianet News TamilAsianet News Tamil

தஞ்சையில் மூதாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த பேத்தி கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மூதாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் அடைத்து வைத்த பேத்தியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

55 year old lady killed by own granddaughter in thanjavur
Author
First Published Mar 30, 2023, 12:36 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி(வயது  55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார். மகள்கள் திருமணாகி சென்று விட்டனர். 

இந்நிலையில், செல்வமணி தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்று வரை செல்வமணி வீடு பூட்டி கிடந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர், செல்வமணி மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ராஜலட்சுமி  மாலை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும், வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. 

55 year old lady killed by own granddaughter in thanjavur

பின்னர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது செல்வமணி பித்தளை குவளையில் தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து பாபநாசம் காவல் துறையினர் தகவலறிந்து செல்வமணியின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். தொடர்ந்து குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, செல்வமணியின் பேத்தியான ஜெயலட்சுமி (28) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடமிருந்து பல்வேறு தடயங்கள் சிக்கின. இதை தொடர்ந்து காவல் துறையினர் ஜெயலட்சுமியை கைது செய்தனர். 

பெரம்பலூர் அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் மர்ம மரணம் - காவல் துறை விசாரணை

காவல் துறையினரின் விசாரணையில், செல்வமணி மகள் கீதா வெளிநாட்டில் உள்ளார். கீதா தனது தாய்க்கு  மாதந்தோறும் பணம் அனுப்பி வந்துள்ளார். இதனையறிந்த, கீதாவின் மகளான ஜெயலட்சுமி, தனது பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில், இருவருக்கும் கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. 

சென்னை - கோவை இடையே இன்று வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கீழே தள்ளியுள்ளார். இதில் செல்வமணியின் தலையில் ரத்தம் வந்துள்ளது. மேலும், ஜெயலட்சுமி செல்வமணியை அவரது சேலையால் கழுத்தை தெறித்து கொலை செய்து, பித்தளை குவளைக்குள் அமிக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஜெயலட்சுமியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios