Asianet News TamilAsianet News Tamil

ஃபாரினுக்கு சென்ற கணவர்.. ஏக்கத்தில் பரிதவித்த 39 வயது பெண்.. 25 வயது இளைஞருடன் எஸ்கேப்..!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் அய்யப்பன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா (39). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  2வது மகன் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

39-year-old woman 2nd marriage with Facebook boyfriend
Author
First Published Sep 17, 2022, 2:19 PM IST

கணவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் ஏக்கத்தில் இருந்த 39 வயது பெண் வீட்டில் இருந்த நகைகளுடன் 25 வயது இளைஞருடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் அய்யப்பன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா (39). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  2வது மகன் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதையும் படிங்க;- போதையில் 140 கிலோ மீட்டர் ஸ்பீடு!தூக்கி வீசப்பட்ட பெண் IT ஊழியர்கள் பலி!விபத்தை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா?

39-year-old woman 2nd marriage with Facebook boyfriend

கடந்த 13ம் தேதி லலிதா, வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளுடன் திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள தனது கணவர் அய்யப்பனுக்கு, லலிதா வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், கடலூரை சேர்ந்த 25 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றும் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

திருமணம் செய்து கொண்டதாகவும், காதலனுடன் லலிதா இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக லலிதாவின் மூத்த மகன்  ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  கட்டிலில் கட்டி புரண்டு அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கொழுந்தன்! நேரில் பார்த்த அண்ணன்! இறுதியில் நடந்த பயங்கரம்

Follow Us:
Download App:
  • android
  • ios