Asianet News TamilAsianet News Tamil

பழடைந்த கட்டிடத்தில் 37 வயது ஆன்டி..!! மாறி மாறி உல்லாசம் அனுபவித்த போலி காக்கிகள்...!!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .  குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் . 
 

37 year old aunts raped by  fake police at telungana state
Author
Chennai, First Published Feb 14, 2020, 12:35 PM IST

பேருந்தில் பயணம் செய்த பெண்ணை பட்டப்பகலில் கீழே இறக்கி மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது .  அதைத் தடுக்க காவல்துறையும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை .  சமீபத்தில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் . 

37 year old aunts raped by  fake police at telungana state

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது . ஆனாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும்  அஞ்சாத ஒரு கும்பல்  பேருந்தில் பயணம் செய்த பெண்ணை கீழே இறக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது .  தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் சுரயா பேட்டையை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார் .  அப்போது அவர் பார்த்தாபூரை அடைந்தபோது ,  போலீஸ் உடையில் மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறியது .  அப்போது அந்த கும்பல்  பேருந்தில் இருந்த பெண் பயணிகளிடம் சோதனை நடத்தியது . 

37 year old aunts raped by  fake police at telungana state

அப்பொழுது 37 வயதுடைய  பெண் மற்றும்  அவரது 12 வயது மகனிடம்  சோதனை செய்ய வேண்டும் ,  ஆகவே கீழே இறங்கும்படி அந்த கும்பல் கூறியது ஆனால் அந்த பெண் அதை மறுக்க,  கீழே வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட அந்தப் பெண் அருகிலிருந்த கட்டிடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.  உடன் இருந்த இருவரும் அந்த சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டனர் .  இதனையடுத்து அந்தப் பெண்ணை மிரட்டிய அந்த கும்பல் அவரை நிர்வாணப்படுத்தி மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்தனர், பின்னர் விஷயத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று எச்சரித்த அந்த கும்பல் , அந்த பெண்ணை அங்கேயே விட்டுத் தப்பிச் சென்றது , இதனையடுத்து ஜஹீராபாத் ஒன் டவுன் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்,  ஆகவே,  இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள  போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios