Asianet News TamilAsianet News Tamil

இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்த 3 பேர்... தெருக்களில் நிர்வாணமாக ஓடிய உச்சகட்ட கொடுமை...

மூன்று காமக் கொடூரர்களிடம் இளம் சிறுமி ஒருவரை, அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தெரு தெருவாக, நிர்வாணமாக துரத்திய பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் ராஜஸ்தானில்  நடந்துள்ளது.

3 young man harassment young girl
Author
Chennai, First Published Sep 15, 2019, 1:50 PM IST

மூன்று காமக் கொடூரர்களிடம் இளம் சிறுமி ஒருவரை, அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தெரு தெருவாக, நிர்வாணமாக துரத்திய பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் ராஜஸ்தானில்  நடந்துள்ளது.

15 வயது இளம் சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர், நண்பருடன் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது 3 இளைஞர்கள், ராஜு கஹார், கைலாஷ் கஹார் மற்றும் நாராயன் குர்ஜார் ஆகிய மூன்று பேர், வழியிலேயே உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டுள்ளனர். 

அப்போது, இவர்களை பார்த்ததும், வழிமறித்து அந்த இளைஞர்கள், நண்பர், உறவினரை மிரட்டி தாக்கி உள்ளனர். அதனால் அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். ஆனால் அந்த இளம் பெண் மட்டும் சிக்கி கொண்டாள். அந்த பெண்ணை 3 பேரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு கடத்தி சென்று, மாறி மாறி கற்பழித்துள்ளனர் அந்த காம வெறி பிடித்த மிருகங்கள்.

தப்பித்து ஓடிய 2 பெண்களில் ஒரு பெண், அங்கிருந்த ஒரு மார்க்கெட்டுக்குள் ஓடிச்சென்று உதவி கேட்டிருக்கிறாள். ஆனால் அங்கு ஒருத்தருமே உதவி செய்ய முன்வரவில்லை. அப்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பதறிய ஒருவர், சிறுமி கடத்தப்பட்ட இடத்துக்கு ஓடி வந்தார். புதிதாக வந்த ஆளை பார்த்ததும், அந்த காம வெறி மிருகங்கள் 3 பேரும் தப்பியோடி விட்டனர்.

ஆனால், அந்த நபரை பார்த்த சிறுமியோ, ஐவரும் நம்மை கற்பழிக்க தான் வந்துள்ளாரோ என காப்பாற்ற வந்தவர் என்று கூட தெரியாமல், நிர்வாண கோலத்துடனேயே தப்பித்து ஓட ஆரம்பித்துள்ளார். இப்படியே பயந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நிர்வாணமாகவே ஓடியிருக்கிறார்.

ஆனால் பின்னாடியே துரத்தி வந்த அவரோ, பயப்படாத பாப்பா நான் உன்னை காப்பாத்த தான் வந்தேன்.. நில்லு நில்லு என்று சொல்லி இருக்கிறார். அந்த நபரிடம் தன்னுடைய துணி இருப்பதை பார்த்தது அந்த பெண்,  ஒரு இடத்தில் நின்றிருக்கிறார். அதன்பிறகு அவர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு வந்து பில்வாரா போலீசில் ஒப்படைத்திருக்கிறார்.

இதை பற்றி பில்வாரா போலீஸார் சொல்லும்போது, 3 பேரும், கோயிலுக்கு போகும்போது, 3 இளைஞர்களும் சரக்கு அருந்தி கொண்டிருந்தனர் என்றும், 3 பேரில் 15வயது சிறுமி மட்டும் சிக்கி உடல் ரீதியாக மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios