Asianet News TamilAsianet News Tamil

சிறுமியை கொன்று சடலத்துடன் பாலியல் உறவு.. காமக்கொடூரர்கள் 3 பேர் கைது

அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கன்ச் பகுதியில் பெற்றோருடன் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர் திட்டமிட்டனர். 

3 men held for killing minor girl sexually assaulting dead body in Assam
Author
First Published Sep 30, 2023, 3:18 PM IST

சிறுமியை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கன்ச் பகுதியில் பெற்றோருடன் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர் திட்டமிட்டனர். சிறுமியின் பெற்றோர் எப்போது வேலைக்கு சென்று வருவார்கள் என கண்காணித்தபடி  இருந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் 3 பேரும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தனர். 

அப்போது சிறுமியை வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அந்த கும்பல் கழுத்தை இறுக்கி சிறுமியை துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் சடலத்துடன் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிறுமியின் கொலை தொடர்பாக மத்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ராகுல் தாஸ், பிப்லாப் பால், ஸுப்ரா மலகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios