Asianet News TamilAsianet News Tamil

என்னோடு வாழ மறுத்த உனக்கு இன்னொரு வாழ்க்கை கேட்கிறதா? பொண்டாட்டியை கொடூரமாக கொன்ற முதல் புருஷன்.!

எப்படியும் காலம் அவளது கோபத்தை குறைக்கும் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன். ஆனால்,  2 மாதங்களுக்கு முன்பு 2 திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். முறையாக சட்டப்படி விவகாரத்து வாங்காமல் அவளுக்கு 2வது திருமணம் செய்து வைத்தது. எனக்கு கடும்  ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

2nd married women...murder first husband
Author
Tirunelveli, First Published Jul 23, 2021, 5:58 PM IST

என்னுடன் வாழ வருவாள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்து  வேறோருவரை 2 வது திருமணம் செய்து கொண்டதால் கொன்றேன் என முதல் கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

நெல்லை மாவட்டம் வி.கே.புரம்  அருகே உள்ள அருணாசலபுரத்தைச் சேர்ந்த  வெள்ளச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி (23). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மை அருகே வாகைக்குளத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு மாதத்திலேயே தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மகலாட்சுமி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

2nd married women...murder first husband

இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜூக்கு, மகாலட்சுமியை 2வதாக அவரது பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று காலை கல்லூத்துக்கு வந்த கண்ணன் வீட்டில் தனியாக இருந்த மகாலட்சுமியை, கண்ணன் என்னிடம் வாழ மறுத்த நீ இன்னொருவனுடன் வாழ்வதா? என்ற கோபத்தில் அவளது கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து கொன்று விட்டு தப்பியோடிவிட்டனர். 

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, மகாலட்சுமியின் முதல் கணவர் கண்ணனை கைது செய்தனர்.

2nd married women...murder first husband

 போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- எனக்கும் மகாலட்சுமிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான முதல் நாளிலேயே இருந்து அவள் தினமும் யாருடனோ செல்போனில் அடிக்கடி பேசிக் கொணடிருந்தாள். அதனால், எனக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவளிடம் கேட்டதற்கு என்னிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாள். இருப்பினும் அவள் மீதான பாசம் காதல் எனக்கு குறையவில்லை. கோபம் தணிந்து என்னுடன் வாழ திரும்பி வருவாள் என்று நினைத்தேன். இதற்காக ஒவ்வொரு மாதமும் அவளது செல்போனில் தொடர்பு கொண்டு குடும்ப நடத்த வருமாறு அழைத்தேன். 

2nd married women...murder first husband

அவர்களது பெற்றோரிடமும்  அவளுடன் வாழ விரும்புவதாக கூறினேன். அவர்களும் என்னுடன் குடும்பம் நடத்த செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், இதற்கு மகாலட்சுமி இனி நான் அங்கு செல்லமாட்டேன். என்னை வற்புறுத்தினால் தற்கொலை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். எப்படியும் காலம் அவளது கோபத்தை குறைக்கும் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன். ஆனால்,  2 மாதங்களுக்கு முன்பு 2 திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். முறையாக சட்டப்படி விவகாரத்து வாங்காமல் அவளுக்கு 2வது திருமணம் செய்து வைத்தது. எனக்கு கடும்  ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்னோடு வாழ மறுத்த உனக்கு இன்னொரு வாழ்க்கைகேட்கிறதா? என கொதித்தது. இதனையடுத்த, வீட்டில் தனியாக இருந்த மகாலட்சுமியை கழுத்தறுத்து கொன்றேன் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios