25 வயசு பொண்ணு அந்த கோலத்தில் இருந்தால்... என்ன தோணும்...!! இது சென்னையா வேறு என்ன..??
கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கூவத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கூவம் ஆற்றங்கரையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை ரப்பர் படகின் மூலம் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிந்தாதிப்பேட்டை போலீசார் அந்த பெண் யார் அவர் எப்படி உயிரிழந்தார். அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சென்னையில் முக்கியமான பகுதியில் இளம் பெண் கூவத்தில் சடலமாக மிதந்திருப்பது சென்னை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.