மீண்டும் அதிரவைத்த பொள்ளாச்சி... 159 மாணவர்கள் கூண்டோடு கைது!
பாலியல் கொடூரம் நடந்த பொள்ளாச்சியில் மீண்டும் நாடே திரும்பி பார்க்க வைக்கும் மற்றொரு சம்பவம் அதே பகுதியில் அரங்கேறியுள்ளது. கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட 159 கேரள மாணவர்களை கோவை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளது.
பாலியல் கொடூரம் நடந்த பொள்ளாச்சியில் மீண்டும் நாடே திரும்பி பார்க்க வைக்கும் மற்றொரு சம்பவம் அதே பகுதியில் அரங்கேறியுள்ளது. கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட 159 கேரள மாணவர்களை கோவை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளது.
கோவை பொள்ளாச்சியில் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் கேரள மாணவர்கள் என்பதும், அவர்கள் அந்த ரிசார்ட்டில் விடிய விடிய சரக்கு கஞ்சா அடித்தும், விருந்து நடத்தி நடனமாடி சத்தம் போட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புகாரை அடுத்து கோவை எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான போலீசார் அந்த ரிசார்ட் தோட்டத்தில் உள்ளே நுழைந்தும், ஒரு டீம் தோட்டத்தை சுற்றி வளைத்தும் இருந்தது. அப்போது கஞ்சா,சரக்கு என விடிய விடிய மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தியதை அடுத்து159 மாணவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த தோட்டத்தின் உரிமையாளர் கணேஷ் மற்றும் ஊழியர்கள் 6 பெரும் கைது செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.