ச்சீ.! 10 வயசு பையனை இப்படியா பண்றது ? டெல்லியில் நடந்த கொடூர சம்பவம் !
சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின், சீலம்பூர் குடிசைப் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த சிறுவனை அதே தெருவில் வசித்து வரும் 3 சிறுவர்கள் தனியாக கூட்டி சென்றுள்ளனர். அந்த சிறுவர்கள் தீட்டிய திட்டத்தின்படி, அந்த 10 வயது சிறுவனை 3 சிறுவர்கள் சேர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ
மேலும் அந்த சிறுவனை இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பியை வைத்தும் துன்புறுத்தியுள்ளனர். அந்த சிறுவன் எப்படியோ அவர்களிடமிருந்து மீண்டு, பயத்தின் காரணமாக யாரிடமும் கூறாமல் இருந்துள்ளான். அடுத்த நாள் அந்த சிறுவன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளான்.
இதையும் படிங்க..கணக்கு தெரியுமா..தரமில்லாத பொங்கல் பரிசா.? அண்ணாமலையை விளாசிய அமைச்சர் சக்கரபாணி!
உடனே அவனை மருத்துவமனையில் சேர்த்தனர் அவனது பெற்றோர்கள். அதுபற்றி சிறுவனிடம் விசாரித்தபோதுதான் அந்த கொடூர சம்பவம் வெளியே வந்தது. பெற்றோர்கள் உடனே போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்