Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் தனியாக இருந்த 18 வயசு பொண்ணு...!! கதவை தாழ்பாள் போட்டு புரட்டி எடுத்த முரட்டு இளைஞன்...!!

ஆபத்தில் சிக்கிக் கொண்டதை எண்ணி அலறி கூச்சலிட்டார் ஆனால் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை , விடாப்பிடியாய் அந்த மாணவியை கதற கதற கற்பழித்த அந்த வாலிபர் தான் வந்த வேலை முடிந்ததும் அங்கிருந்து தலைமறைவானார் 

+2 standard girl raped by a married man when she is in individual at home after school
Author
Chittoor, First Published Mar 10, 2020, 5:19 PM IST

வீட்டில் தனியாக இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை  கற்பழித்து தலைமறைவான வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் . வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென நுழைந்த அந்த வாலிபர் அந்தப் பெண்ணை கதற கதற கற்பழித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  அரசும் காவல் துறையும் அதைத் தடுக்க பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.   ஆந்திரா ,  தெலுங்கானா , உத்தரப்பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு  எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வரும்  நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் கொடூர சம்பவம் நடந்துள்ளது . 

+2 standard girl raped by a married man when she is in individual at home after school

குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி ,  அவர்  வசிக்கும் பகுதியில் உள்ள அரசு  பள்ளி ஒன்றில்  12ஆம் வகுப்பு பயின்று வருகிறார் இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அம் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார் .  அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்தனர்.  இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார் .  திருமணமான அவர் அம்மாணவி தனிமையில் இருப்பதை   கண்டுள்ளார் .  இந்நிலையில்  வீட்டில் திடீரென நுழைந்த அந்த வாலிபர் கதவை  தாழ்ப்பால் இட்டு  மாணவியை கற்பழிக்க  பாய்ந்தார் .  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி . தான் 

+2 standard girl raped by a married man when she is in individual at home after school

ஆபத்தில் சிக்கிக் கொண்டதை எண்ணி அலறி கூச்சலிட்டார் ஆனால் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை ,  விடாப்பிடியாய் அந்த மாணவியை கதற கதற கற்பழித்த அந்த வாலிபர் தான் வந்த வேலை முடிந்ததும் அங்கிருந்து தலைமறைவானார் .  பெற்றோர்கள் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவத்தை குறித்து  மாணவி கூற அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகிலுள்ள பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .  இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .  பட்டப்பகலில் தனிமையில் இருந்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios