ரத்தத்தால் காதல் கடிதம்....!!! இளம் நடிகர் அதிர்ச்சி.....!!!
சினிமாவில் அறிமுகம் கொடுக்கும் இளம் நாயகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உருவாவது வழக்கம் தான், அதே போல் பலர் தங்கள் காதலையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மண் பானையும் மீன் குழம்பும் படத்தில் நடித்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்க்கு ஒருவர் காதல் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், சிலரால் அவர்களுக்கு தொல்லைகள் இருக்கும். அதில் சில விஷயங்கள் லீக் ஆகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.
தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சமீபத்தில் நடிகை அஸ்னா நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படம் வெளியானது.
அதுவும் அந்த பெண் ரசிகை ரத்தத்தால் எழுதி காளிதாஸ் மீதான தன காதலை வெளிப்படுத்தியுள்ளதால் இதைக்கண்ட அந்த நடிகர் யார் இப்படி செய்தது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.