ரஜினி - பா.இரஞ்சித் இணையும் 2-வது படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
ரஜினி - பா.இரஞ்சித் இணைய இருக்கும் இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளன.
கோச்சடையான், லிங்கா போன்ற படங்களால் படுதோல்வி கண்டார் சூப்பர் ஸ்டார்.
பின்னர், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் செம்ம ஹிட் கொடுத்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த ரஜினி, தனது அடுத்தப் படத்தை ரஞ்சித்துடன் இயக்க முடிவெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த படத்திற்கான கதையை தயார் செய்யும் வேலைகளில் பா.இரஞ்சித் இறங்கினார்.
தற்போது தனது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை பா.இரஞ்சித் மேற்கொண்டுள்ளார்.
ரஜினி தவிர்த்து படத்தில் நடிக்க உள்ள மற்ற கலைஞர்கள் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் என்பது தெரிந்துள்ளது. இந்த தகவலை சந்தோஷ் நாராயணனின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும், பிண்ணனி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.