Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் கொரோனா பரிசோதனை... ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புகிறார் தெரியுமா?

அந்த பரிசோதனை முடிவுவை பெற்றுக் கொண்ட பின்னர் நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக சென்னை திரும்ப உள்ளார். 

when super star rajinikanth retrun to chennai
Author
Chennai, First Published Dec 24, 2020, 7:03 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் முதல் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் அண்ணாத்த படத்தை முடித்துக் கொண்ட தீர்மானித்தார். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. படவேலைகளை விரைவில் முடிக்க தீர்மானித்த ரஜினி தினமும் 14 மணி நேரம் நடித்து வந்தார். 

when super star rajinikanth retrun to chennai

இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.  ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து சென்றுள்ள மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஐதராபாத்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று பிவிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

when super star rajinikanth retrun to chennai


அந்த பரிசோதனை முடிவுவை பெற்றுக் கொண்ட பின்னர் நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக சென்னை திரும்ப உள்ளார். சென்னை திரும்பிய பிறகும் சில நாட்களுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளதால், ரஜினிகாந்த் குவாரண்டைனில் இருப்பார் என கூறப்படுகிறது. இதனிடையே டிசம்பர் 31ம் தேதி ரஜினிகாந்த் தனது கட்சியின் தொடக்க தேதி குறித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளதாக ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் பதற்றத்தில் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios