We have taken good pictures while not cg - shakoo khan ...

பாகுபலி-2 படம் இதுவரை ரூ.1350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆனால், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்கள் அதை பற்றி ஒரு வார்த்தையும் இதுவரை பேசவில்லை என்று முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றன சினிமா வட்டாரங்கள்.

மேலும், பாகுபலி தென்னிந்திய படம் என்பதால்தான் வயிற்றெரிச்சலில் அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள் என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் இந்த விமர்சனம் செய்யும் அதிமேதாவிகள்.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக பாகுபலி பற்றி பேசியுள்ளார்.

"பாகுபலி முதல் பாகத்தை பார்த்திருக்கிறேன். சினிமாவிற்கு எழுச்சியூட்டும் விதமாக அது இருந்தது.

நான் இரண்டாம் பாகத்தை இன்னும் பார்க்கவில்லை. அதுவும் முதல் பகுதி போலவே நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலும், தற்போது சிஜி தொழில்நுட்பம் சினிமா துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது இல்லாதபோதும் நாம் நல்ல படங்களை எடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது” என்று அசால்டாக சொன்னார்.