Asianet News TamilAsianet News Tamil

தெய்வத்தை பார்க்க வந்தோம்.. கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட ரஜினி வெறியர்கள்..

அதிகாலையில் கொட்டிய கனமழையையும் பொருட்படுத்தாமல் ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்தை உற்சாகமாக கொண்டாடினர். ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியின் உடல்நிலை சரியாக வேண்டுமென்றும், அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தீச்சட்டி ஏந்தி திரையரங்கு வருகை தந்தார்,

We came to see the goddess .. Rajini fanatics who celebration in the pouring rain ..
Author
Chennai, First Published Nov 4, 2021, 10:11 AM IST

நேற்று நள்ளிரவு முதல்  தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது இந்நிலையில் நேற்று இரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விடியவிடிய அண்ணாத்த படத்தின் வெளியீட்டை அவரது ரசிகர்கள் கொண்டாடினார். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த படம் வெளியாகியுள்ள  நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் ஆரவாரமாக வெளியாகியுள்ளது. அதுவும் தீபாவளி பண்டிகைக்கு திரைப்படம் வெளியாகி இருப்பதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு  ரஜினியின் திரைப்படம் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளதே அந்த உற்சாகத்திற்கு காரணம். 

We came to see the goddess .. Rajini fanatics who celebration in the pouring rain ..

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்துள்ள அண்ணாத்த திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படம் அண்ணன்  தங்கை பாசத்தை கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, மதுரைக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் பாசப் பிணைப்பை காட்டும் வகையில் இந்த படத்தின் ஸ்கிரீன்பிளே அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன்  காளையனாக வலம் வருகிறார், இந்த படத்தில் வழக்கம்போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு பலரின் மனதை தொடும் வகையில் உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றுள்ளன ஆனால் அவைகள் பெருமளவில் எடுபடவில்லை. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சூரி, சதீஷ் மற்றும் சத்தியன் ஆகிய மூன்று காமெடியர்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

We came to see the goddess .. Rajini fanatics who celebration in the pouring rain ..

கூடுதலாக ரஜினியுடன் குஷ்பு, மீனா ரொமான்ஸ் காட்சிகள் ஒரளவுக்கு ரசிக்க வைக்கிறது. ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு தீனிபோடும் ஒரு படமாக அண்ணாத்தே இல்லை என்று சொன்னாலும் கூட  வழக்கம்போல ரஜினிக்காக படம் பாரக்க அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கொட்டும் மழையிலும் அதிகளவில் காலை முதலே ரசிகர்கள் திரையரங்குகள் குவிந்தனர், இதேபோல் சென்னை ரோகிணி திரையரங்கில் அதிகாலை 4 மணி அளவில் அந்த படத்தின் முதல் காட்சி வெளியானது, இதையொட்டி நேற்று இரவே திரையரங்குகளில் சாரைசாரையாக ரசிகர்கள் குவிய தொடங்கினர். விடிய விடிய அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மிக பிரம்மாண்டமான கட்டவுட்டுகளுடன் திரையரங்குகளுக்கு வந்தவர்கள் அதற்கு தோரணங்கள் கட்டி, வாத்தியங்கள் முழங்க நடனமாடி பட்டாசுகள் வெடித்து உற்சாக பொங்க கொண்டாடினார்.

We came to see the goddess .. Rajini fanatics who celebration in the pouring rain ..

அதிகாலையில் கொட்டிய கனமழையையும் பொருட்படுத்தாமல் ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்தை உற்சாகமாக கொண்டாடினர். ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியின் உடல்நிலை சரியாக வேண்டுமென்றும், அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தீச்சட்டி ஏந்தி திரையரங்கு வருகை தந்தார், அண்ணாத்த பட ரஜினியைப் போல  அவரது ரசிகர்கள் வேடமணிந்து திரையரங்குகளுக்கு வருகை புரிந்துள்ளனர். ரஜினி கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூக்களையும் தூவி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இவர்களில் ஏராளமான பெண் ரசிகர்களும் இடம் பெற்றிருந்தனர். அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்ட போது தங்கள் தெய்வத்தை காண வந்ததாகவும், தலைவரை திரையில் பார்ப்பதே வரம் என்றும், நிச்சயம் படம் சூப்பர்ஹிட் ஆகும் என ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் கூறினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios