நாசர் தலைமையில் பொறுப்பேற்றுள்ள விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மீது நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட நடத்த பட்ட போட்டியில் 6 கோடி ரூபாய் வரை கையாடல் செய்துள்ளதாக புகார் எழுப்பினார் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் வராகி.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஷாலிடம் பத்திரிகையாளர்கள் இந்த கேள்வியை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த விஷால் இதுவரை எவ்வளவு பணம் செலவிட்டோம் என ஒவ்வொரு ரூபாய்கான கணக்கு நடிகர் சங்கத்தில் உள்ளது என்றும். அதை எப்போது வேண்டும்மானாலும் யாரும் வந்து பார்க்கலாம்.

அதனை நாளை இணையத்தளத்தில் வெளியிட உள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.