குடிபோதையில் கன்னட நடிகருடன் கட்டிப்புரண்ட தமிழ் ஹீரோ...வலை வீசும் போலீஸ்...
’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ பட ஹீரோ விமெல் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விமெலுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ பட ஹீரோ விமெல் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விமெலுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் விமல், ‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ’களவாணி’ மற்றும் ’வாகை சூடவா’ போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றார். பின்னர் பெரிய அளவில் படங்கள் அவருக்கு வெளியாகவில்லை. இதனால் தனது பெயரை நியூமராலஜி விமெல் என்று மாற்றிக்கொண்டார். சமீபத்தில் வெளியான இவரது ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஆபாச கருத்துக்களுக்காக ஓரளவு ஓடியது.
இந்நிலையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு நடிகர் விமல் தனது நண்பர்களுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதே விடுதியில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கி இருந்ததாகவும், அப்போது குடிபோதையில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாகி இருவரும் கட்டி உருண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களை தாக்கியதாக நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது 294பி என்ற குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நடிகர் விமல் தரப்பு சார்பிலும் காவல்நிலையத்தில் அபிஷேக் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.