இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், உருவாகி வந்த 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளதை புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம். 

நடிகர் விக்ரம், 'பொன்னியின் செல்வன்' படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வந்தார். தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து சமூக நீதி கருத்துக்களை பேசி, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள பா ரஞ்சித், இந்த முறை சற்று வித்தியாசமான கதை களத்தை கையாண்டுள்ளார். 'கே ஜி எஃப்' பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையை படமாக்கி உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க பார்வதி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன் , பசுபதி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மிகப்பிரமாண்டமான பொருட்செலவில், ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

10 வருடங்கள் ஆகியும் நிறுத்த முடியவில்லை! மஞ்சுளா பிறந்தநாளில் வனிதா பகிர்ந்த மற்றொரு தகவல்! குவியும் வாழ்த்து

இந்நிலையில் காடு, மலை, சார்ந்த இடங்களிலும், கோலார் தங்க வயல் பகுதியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட நிலையில், இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் விக்ரம்.... சில புகைப்படங்களை பதிவிட்டு போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு நடந்த திருமணம்..! ஒன்று கூடிய பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்!

இப்படம் குறித்து விக்ரம் கூறியுள்ளதாவது... 'இன்றுடன் நிறைவடைத்துவிட்டது. என்ன ஒரு பயணம்.... மிகவும் அற்புதமான நபர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். ஒரு நடிகராக உற்சாகமான அனுபவங்கள் கிடைத்தது. இங்கே நான் பகிர்ந்துள்ள போட்டோவுக்கும் கடைசி புகைப்படத்திற்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள் தான் இருந்தது. என் கனவை நினைவாக்கியதற்கு ரஞ்சித்துக்கு ஒவ்வொரு நாளும் நன்றி என பதிவிட்டுள்ளார்.அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் ஷுட்டிங் ஆரம்பித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தற்போது நிறைவடையும் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் விக்ரம். என்பது குறிப்பிடத்தக்கது.