ஓடிடி தளத்திற்கு வரிசை கட்டும் திரைப்படங்கள் ..! விஜய் சேதுபதியோடது மட்டும் இரண்டு படங்கள்!
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த, இன்று முதல் நண்பகல் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது மட்டும் இன்றி, அத்யாவசிய தேவைகள் இன்றி... வெளியில் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த, இன்று முதல் நண்பகல் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது மட்டும் இன்றி, அத்யாவசிய தேவைகள் இன்றி... வெளியில் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது, மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில்... தியேட்டரில் வெளியாக தயாராக இருந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறார்தாம். விஜய்சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள, 19 (1 ) (ஏ) என்கிற படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.எஸ்.இந்து இந்த படத்தை இயக்கியுள்ளார். அதே போல் தமிழில், விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரண சிங்கம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த மாதம், தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் 17 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்', திரிஷாவின் 'ராங்கி' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. நடிகர் சிவா நடித்துள்ள 'சுமோ' படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.