நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தளபதி விஜய் சைக்கிளில் வந்து, ஓட்டு போட்டது குறித்து தன்னுடைய கருத்துகளை, தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏசியாநெட் தளத்திற்கு Exclusive பேட்டி கொடுத்துள்ளார். 

Exclusive: சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜய்... அரசியல் நோக்கத்திலா? தந்தை எஸ்.ஏ.சி பளீச் பதில்!

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தளபதி விஜய் சைக்கிளில் வந்து, ஓட்டு போட்டது குறித்து தன்னுடைய கருத்துகளை, தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏசியாநெட் தளத்திற்கு Exclusive பேட்டி கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது, அரசியல் ரீதியான கருத்தை வழுத்துருத்தத்தான் என்று சர்ச்சை எழுந்துள்ளது?

இந்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், " 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் பொது தேர்தலில், விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார் என்பது தற்போது மிகவும் வைரலாகியுள்ளது. இது போல் 5 வருடத்திற்கு ஒருமுறை வரும் பொது தேர்தலில் ஒவ்வொருவரும் எப்படி தங்களை அடையாள படுத்திக்கொள்கிறார்கள் என்பது முக்கியம். அவர் இப்படி செய்ததை நான் ஒரு பொது மக்களாக இருந்து பார்க்கும் போது, விஜய் தன்னை ஒரு நடிகனாகவோ, விஐபி -யாகவோ வெளிப்படுத்தி கொண்டு, ஓட்டு போட வேண்டும் என நினைக்காமல், ஒரு சாதாரண மனிதனாக, எல்லோரும் சமம் என நினைத்து, எல்லோரும் ஒரு இந்தியன் என்று நினைத்து... சாதாரண ஒரு தமிழனாக வந்தார். அந்த இடத்தில் அவர் தன்னை ஒரு நடிகராக அடையாள படுத்திக்கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறன் என கூறினார்.

அரசியல் பிரச்சாரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறித்து அதிகம் பேசப்பட்டது, எனவே இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டுபோட்டாரா? 

என்கிற கேள்விக்கு... கடந்த தேர்தலில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் விஜய். எனவே நானும் பொது மக்களில் ஒருவர் என்பதை தான் அந்த இடத்தில் அழுத்தமாக கூற விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா என மக்கள் பலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை வெளிப்படுத்தும் விதமாக சைக்கிளில் வந்தாரா விஜய், என எழுபட்ட கேள்விக்கு?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதில் வெற்றிபெறுவதும், தோல்வியடைவதும் மக்கள் கையில் தான் உள்ளது என பதிலளித்தார். விஜய்யை, எம்.ஜி.ஆருடன் இணைத்து தமிழக ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஓட்டுவது குறித்த கேள்விக்கு, அதனை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.