Asianet News TamilAsianet News Tamil

’கட்சி தாவுறது அவருக்குப் புதுசா?...பா.ஜ.க.வுக்குத் தாவும் ப.சிதம்பரம்?...

’ப.சிதம்பரம் என்பவர் தமிழ்நாட்டுக்கு  எப்போதும் லக்கேஜ்தான்..இந்த வழக்கு ஒரு மேல்மட்ட அரசியலின் மிரட்டல்..திரைமறைவு பேரத்துக்கான வழிமுறை.இதனைப் பெரும் அநீதியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’என்று தனது முகநூல் பக்கத்தில் பொங்கியிருக்கிறார் பிரபல நடிகரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குநருமான கவிதா பாரதி.
 

tv serial director facebook status about p.chidambaram
Author
Chennai, First Published Aug 21, 2019, 3:16 PM IST

’ப.சிதம்பரம் என்பவர் தமிழ்நாட்டுக்கு  எப்போதும் லக்கேஜ்தான்..இந்த வழக்கு ஒரு மேல்மட்ட அரசியலின் மிரட்டல்..திரைமறைவு பேரத்துக்கான வழிமுறை.இதனைப் பெரும் அநீதியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’என்று தனது முகநூல் பக்கத்தில் பொங்கியிருக்கிறார் பிரபல நடிகரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குநருமான கவிதா பாரதி.tv serial director facebook status about p.chidambaram

அவரது காட்டமான பதிவு இதோ,...ப.சிதம்பரம் வேட்டி கட்டிய தமிழர்தான்..தமிழிலக்கியம் அறிந்தவர்தான்..ஆனால் தமிழ்நாட்டிற்கோ, தமிழருக்கோ, ஈழத்தமிழருக்கோ அவரால் பத்து பைசாவுக்குக்கூட பயன் இருந்ததில்லை..பல முறை அவரை வெல்ல வைத்த சிவகங்கைத் தொகுதிக்காகக்கூட அவர் சிறு துரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை..
காங்கிரஸ் தொண்டர்களைக்கூட மதித்ததில்லை

வெற்றி பெற்று அமைச்சரானால் மற்ற வடநாட்டு வாலாக்களைப் போல் அவரும் ஒரு டெல்லி சுல்தான்.. அவ்வளவுதான்.தமிழ்மக்களின் உணர்வையும், உரிமையும் காப்பதற்காக நடந்த வழக்குகள் பலவற்றில் தமிழருக்கு எதிராக வாதாடியவர் நளினி சிதம்பரம். அரசாங்கத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகத் திருப்பிவிட்டதில் ப.சிதம்பரத்துக்கும் பெரும் பங்கிருக்கிறது..
சுருங்கச் சொன்னால பா.ஜ.க. தலைவர்களுக்கும், சிதம்பரத்துக்கும் பெரிய வித்தியாசங்களொன்றுமில்லை..

தமிழ்நாட்டுக்கு அவர் எப்போதும் லக்கேஜ்தான்..இந்த வழக்கு ஒரு மேல்மட்ட அரசியலின் மிரட்டல்..திரைமறைவு பேதத்துக்கான வழிமுறை.இதனைப் பெரும் அநீதியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை..ஏனெனில் பதவியிலிருந்தபோது இதைத்தான் அவர் செய்தார்..ப.சிதம்பரம் யாருக்கெல்லாம் ஆதரவாக இருந்தாரோ, அந்தப் பெரு முதலாளிகள் அவரைக் காப்பாற்றுவார்கள்..tv serial director facebook status about p.chidambaram

அதன் பெருவிலையாக ப.சிதம்பரம் பா.ஜ.க.வில் கூட சேரக்கூடும்..அல்லது பா.ஜ.க. வழிகாட்டலில் ரஜனியின் கரத்தை வலுப்படுத்தக்கூடும்..இது நடக்காது என்று சொல்லுமளவுக்கு அவரொன்றும் காங்கிரசுக்கு கற்போடு இருப்பவரில்லை..ஏற்கனவே ஒரு முறை காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்தான்..

எனவே சிதம்பரம் பிரச்னை தமிழர் பிரச்னையல்ல.. அவரது தனிப்பட்ட பிரச்னைதான்..இப்படியெல்லாம் சொல்வது பா.ஜ.க.வுக்கு சாதகமாக ஆகாதா எனலாம்..
இருந்தாலும் பாதகமில்லை..அதற்காகவெல்லாம் சிதம்பரத்திற்க்காகப் பொங்க முடியாது..நன்றி..வணக்கம்’என்று பதிவிட்டிருக்கிறார் கவிதாபாரதி.

Follow Us:
Download App:
  • android
  • ios