Asianet News TamilAsianet News Tamil

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ரேடியோவில் அறிவித்த நடிகர்... யாரு தெரியுமா?

ஆகஸ்ட் 15, 1947 அதிகாலையில், அகில இந்திய வானொலியில் ஒரு இளைஞரின் குரல் இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாக மாறிவிட்டது என அறிவித்தது. அந்தக் குரல் யாருடையது என்று தெரியுமா?

This Prolific Actor Was The First Person To Announce India Independence On Radio sgb
Author
First Published Apr 15, 2024, 7:43 PM IST

அகில இந்திய வானொலியில் (AIR) ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததாக முதலில் அறிவித்த நபர் புகழ்பெற்ற நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். சிறந்த நடிகராகப் புகழ்பெற்ற அவர் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அவர் தனது 18வது வயதில் நாடக மேடையில் நடிக்கத் தொடங்கினார். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார்.

பின், அகில இந்திய வானொலியில் (AIR) செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போதுதான் இந்தியா விடுதலை அடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியை தனது குரலில் நாட்டு மக்களுக்கு முதன்முதலில் அறிவித்தார்.

அவர் 1964 இல் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, மெரினா எழுதிய தனிக்குடுதானம், ஊர் வம்பு, காதல் கட்டு போன்ற பல்வேறு நாடகங்களில் பல வேடங்களில் நடித்தார். கடவுள் வந்திருந்தார், அடிமைகள் மற்றும் ஊஞ்சல் போன்ற நாடகங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை மேலும் கவர்ந்தார்.

துறவறம் பெறுவதற்காக ரூ.200 கோடி சொத்துக்களை நன்கொடையாக அளித்த குஜராத் ஜோடி!

This Prolific Actor Was The First Person To Announce India Independence On Radio sgb

நீண்ட காலமாக நடிப்பு மற்றும் நாடகத்தில் கொண்டிருந்த ஆர்வத்தால் நியூ தியேட்டர்ஸ் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பிரஸ் இன்பர்மேஷன் பீரோவில் உதவித் தகவல் அதிகாரியாகவும் இருந்தார். பின்னர் திட்டம் இதழின் ஆசிரியராகவும், யோஜனா இதழின் மூத்த நிருபராகவும் பணிபுரிந்தார்.

வறுமையின் நிறம் சிவப்பு, ராஜபார்ட் ரங்கதுரை, மூன்றாம் பிறை, தில்லு முல்லு, வருஷம் 16, கேளடி கண்மணி, ஆசை, மகாநதி போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலுடன் சித்திரம் படத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கமல்ஹாசன் மற்றும் ரதி அக்னிஹோத்ரியுடன் பாலிவுட் பிளாக்பஸ்டர் படமான ஏக் துஜே கே லியேவில் நடித்தார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதா, பூர்ணத்தின் நடிப்புத் திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டு, நரேந்தனின் வினோத வாழ்க்கை என்ற தனது நாடகத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தார். பிறகு, கடவுள் வந்திருந்தார் என்ற நகைச்சுவை நாடகத்திலும் நடிக்க வைத்தார். அதில் அவரது நடிப்பு பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

Zoom மீட்டிங்கில் ஆபாச வீடியோ... பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜன் ஆவேசம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios