thirusha admited the hospital

நடிகை திரிஷாவிற்கு திடீர் என புட் பாயிசன் ஆனதால், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இதை கேள்விப்பட்ட திரிஷாவின் ரசிகர்கள்... என்ன நடந்தது என ட்விட்டர் மூலம் தொடர்ந்து விசாரிக்க தொடங்கினர்.

இதை அறிந்த திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார், இது குறித்து அவர் கூறுகையில், தற்போது திரிஷா நலமாக உள்ளார். அவருக்கு புட் பாயிசன் ஆகிவிட்டது என பரவிய அனைத்து தகவல்களும் வதந்தி என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது திரிஷா, மலேசியாவில் சதுரங்க வேட்டை 2 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என கூறியுள்ளார்.