Asianet News TamilAsianet News Tamil

#BREAKING போதைப்பொருள் வழக்கு... நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்...! ​

இதனிடையே ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 


 

The Karnataka High Court give bail to actress Sanjana Galrani
Author
Chennai, First Published Dec 11, 2020, 3:59 PM IST

பாலிவுட்டை அடுத்து கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய 4 பேரிடமும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். 

The Karnataka High Court give bail to actress Sanjana Galrani

மேலும் கன்னட திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபல இளம் நடிகைகளான ராகிணி திரிவேதி செப்டம்பர் 4ம்தேதி கைது செய்யபட்டார். அதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணி உட்பட 14 பேர்  கைது செய்யப்பட்டனர்.இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழ, அமலாக்கத்துறையும் இருவரிடமும் விசாரணை நடத்தியது.

The Karnataka High Court give bail to actress Sanjana Galrani 

 

இதனிடையே ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கோரி சஞ்சனா மனு தாக்கல் செய்திருந்த நிலையில், உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios