தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பிரபல இயக்குநர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பிரபல இயக்குநர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலகம் எங்கும் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பீதியால் தற்போது அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக நிற்கின்றனர். அந்த வீடியோவை பதிவேற்றி இறுதியில் பாகுபலி படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற கும்பலை விட அதிக கும்பல் இங்குக் கூடியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல அடிக்கடி சர்ச்சையான பல ட்விட்களை பதிவிட்டு வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா நேற்று, தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த ட்விட்டை பார்த்த பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதே சமயம் பலர் "நீங்கள் இந்த கொரோனாவை விட பாயங்கரமானவர் அதனால் கொரோனா உங்களை ஒன்றும் செய்யாது என்று கூறி கிண்டலும் அடித்தனர்", அதே சமயம் சும்மா April Fool பண்ணாதிங்கனு என்று கமெண்ட்டுகளை பறக்கவிட்டனர்.

இறுதியில் பலரும் யூகித்ததை போலவே தனது அடுத்த பதிவில் "எனக்கு கொரோனா இல்லை, எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார். என்னை April Fool ஆக்கிவிட்டார். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.