தளபதி விஜய் தன்னை காண, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகரை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்ட வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவில் துவங்கி, சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில், 'கோட்' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கு கேரளாவில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ள நிலையில், தினம் தோறும் அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெளியே காத்திருந்து அவரை பார்த்த பின்னரே வீடு திருப்புகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தளபதி விஜய்யும், ஷூட்டிங்கில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வந்து ரசிகர்கள் முன்பு அட்டனன்ஸ் போட மறப்பதில்லை. மேலும் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல்... அடிக்கடி விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Actress Radha: நடு ரோட்டில் சரமாரியாக தாக்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா! போலீசில் பரபரப்பு புகார்!

நேற்று தினம் கூட 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதுவும் மலையாளத்தில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ’சேச்சி... சேட்டன்மார், நீங்கள் ஓணம் பண்டிகையின் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்களோ அதே மகிழ்ச்சியை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன், அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்’ என கூறி இருந்தார்.

Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!

இதை தொடர்ந்து விஜய்யின் மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய்யை பார்க்க மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர்... தளபதியை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருக்க, விஜய் அந்த ரசிகரை வந்து சந்தித்தது மட்டும் இன்றி,அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…