தெலுங்கு நடிகர்கள் ஸ்டுடியோக்களை இதுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள்…! உண்மையைப் போட்டுடைக்கும் ஸ்ரீரெட்டி !!
தெலுங்கு நடிகர்களும். தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளவே ஸ்டுடியோக்களை பயன்படுத்துகிறார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி பகீர் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு பழக்கம் உள்ளது என தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழில் சுச்சி லீக்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போல், தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி ஸ்ரீலீக்ஸ் என்கிற தலைப்பில், தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை அம்பலப்படுத்துவேன் எனக் கூறி சமூகவலைத்தள பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த வாரம் தெலுங்கு சினிமா சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீ ரெட்டி , தன்னை நடிகர் சங்க உறுப்பினராக அனுமதி அளிக்க மறுப்பதால் இந்த போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.
இதனிடையே ஒரு பெரிய தெலுங்குபட தயாரிப்பாளரின் மகன் தன்னை ஸ்டுடியோவிற்கு அழைத்து கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும், அவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன என்றும் கூறி ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் சினிமாவில் வாய்ப்பு கேட்ட என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்ய சொன்னார்கள். புகைப்படமும் அனுப்ப சொன்னார்கள். நான் அனைத்தையும் செய்தேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்” எனவும் ஸ்ரீரெட்டி பகீர் கிளப்பினார்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகைப் பொறுத்தவரை செக்ஸ் ஸ்டுடியோக்கள்தான் பாதுகாப்பான இடம் என்றும், அங்கு எந்த தொந்தரவும் இருக்காது என்றும் ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார்.
தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் ஸ்டுடியோக்களை விபச்சாரம் செய்ய பயன்படுத்துகிறார்கள் ,அரசும் இதை கண்டுகொள்ளாது என்றும், வட நாட்டிலிருந்து வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்குத்தான் செல்கிறது என்றும் ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டினார்..