Asianet News TamilAsianet News Tamil

இது யார் இட்ட சாபம்? எஸ்.பி.ஜனநாதனுக்கு டி.ராஜேந்தரின் உருக்கமான இரங்கல்!

கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜனநாதன், நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

t rajendhar condolence for sp jananathan
Author
Chennai, First Published Mar 15, 2021, 10:29 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி இருந்தார். படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் 11 ஆம் தேதி, வீட்டில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த அவரை, துணை இயக்குனர்கள் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

t rajendhar condolence for sp jananathan

கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜனநாதன், நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், உருக்கமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், தற்போது பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்கும் டி.ராஜேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: லவ் யூ சார்... எஸ்.பி. ஜனநாதன் திடீர் மறைவால் உருகும் விஜய்சேதுபதி, ஆர்யா, கார்த்தி...!
 

இதுகுறித்து இயற்கை க்கு மாறுபடாமல் நல்ல கருத்துக்களை தரும் ஈ தல் குணம் மருவி கெடாமல், சொல்ல வந்த கருத்துக்களை பேராண்மை யோடு வெளியிட்டு பொதுவுடமை கருத்துக்களை பரப்புவதில் என் போக்கு தனி போக்கு பொது மக்களின் சொத்து ஆகிவிடாது புறம்போக்கு என இலட்சியத்தோடு படங்களை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த லாபம்.

t rajendhar condolence for sp jananathan

அவரது மறைவு என்பது காலனே இது யார் இட்ட சாபம்? இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios