கஜா புயலா கண்டுக்கமாட்டேன். பொள்ளாச்சியில பாலியல் பயங்கரமா? அதுக்கு ஒரு அறிக்கை கூட கொடுக்கமாட்டேன் என்று அரசியல் தனக்கு தேவையில்லை என்று ஒதுங்கி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு பிரபல இயக்குனர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். 

கஜா புயலா கண்டுக்கமாட்டேன். பொள்ளாச்சியில பாலியல் பயங்கரமா? அதுக்கு ஒரு அறிக்கை கூட கொடுக்கமாட்டேன் என்று அரசியல் தனக்கு தேவையில்லை என்று ஒதுங்கி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு பிரபல இயக்குனர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்ட அவர்,...40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறே. இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்..என அஜித்துக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். கமல் ஏற்கனவே அரசியலில் முழுமூச்சாக இறங்கியுள்ள நிலையில் அஜீத்தும் அரசியலுக்கு வரவேண்டும். கமல், அஜீத் ஆகிய இருவரில் ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்பது சுசீந்திரனின் சொந்த விருப்பமாம்.