Asianet News TamilAsianet News Tamil

என் காதலை ஜெயிக்க வைத்தவர்.... ஜெயலலிதா..... மனம் திறந்த சூர்யா....!!!

surya open-talk-about-jayalalitha
Author
First Published Jan 1, 2017, 1:10 PM IST


தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வருபவர்கள்  சூர்யா-ஜோதிகா தம்பதியினர். இவர்கள் இருவரும் சினிமாவில் சேர்ந்து நடிக்கும் போது  காதலில் விழுந்து பின்னர் பல எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் நடக்க முக்கிய காரணமாக அமைந்தது  மறைந்த முதலவர் ஜெயலலிதா தான் , என சூர்யா தற்போது கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா தன் காதல் பற்றி பெற்றோரிடம் பற்றி கூறுவதற்கு முன், ஜெயலலிதாவிடம் தான் முதன்முதலில் கூறினாராம். தன் தங்கை திருமணத்திற்கு 'அம்மா' வந்தபோது தான் இதனை கூறியுள்ளார் சூர்யா.

சூர்யா பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறியபோது அதற்கு அவரது வீட்டில் பல எதிர்ப்புகள் இருந்தது சிவகுமார் எளிதில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, இதை அறிந்த ஜெயலலிதா, சிவகுமாரிடம் பேசி சூர்யா-ஜோதிகா திருமணம் நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios