Asianet News TamilAsianet News Tamil

MaanaaduRelease | "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??" : மாநாடு குறித்து கெத்து ட்வீட் போட்ட தயாரிப்பாளர்!!

MaanaaduRelease | பல சோதனைகளுக்கு பிறகு இன்று மாநாடு படம் திரையிடப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள சுரேஷ் காமாட்சி "எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்" என பதிவிட்டுள்ளார்.
 

suresh kamatchi tweet about maanaadu
Author
Chennai, First Published Nov 25, 2021, 8:12 AM IST

மாநாடு படம் துவங்கியதிலிருந்து இரண்டு வருட காலமாக பல கட்ட இன்னல்களை சந்தித்து விட்டது. முதலில் சிம்புவின் கால்ஷீட் பிரச்சனை. பின்னர் ரிலீஸ் செய்வதில் அடுத்தடுத்த தாமதம், தற்போது சிறப்பு காட்சி ரத்து என மாநாடு படத்திற்கு தலைவலி நீண்டு கொண்டே செல்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25- ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லைசன்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போவதாக சுரேஷ் காமாட்சி நேற்று மாலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி இன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஒருவழியாக  அனைத்து திரையரங்குகளிலும் 7.30 காட்சி திரையிடப்பட்டுள்ளது.

suresh kamatchi tweet about maanaadu

இந்நிலையில் மாநாடு குறித்து பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி :

"எத்தனை இடர் வரினும் 
எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!"
என அப்பதிவிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios