"அதிகமாக காய்கறிகள் சாப்பிடுவதே என் சக்திக்கு காரணம்" - சன்னியை உசுப்பி விட்ட பீட்டா!!!
அதிகளவான காய்கறிகளை சாப்பிட்டு வருவதே தன்னுடைய சக்திக்கு காரணம் `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்று பீட்டாவின் விற்கு ஆதரவாக விளம்பரம் செய்துவருகிறார் ஹாட் நாயகி சன்னி லியோன்.
மாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கேரளா, புதுவை, கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு விளங்கும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதற்க்கு ஆதரவாகசினிமா நட்சத்திரங்களை கடந்த சில வருடங்களாக விளம்பர தூதர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக விளம்பரத்தில் நடித்துள்ளார் கவர்ச்சி நாயகி சன்னி லியோன், `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதம் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதற்காக, பீட்டாவுடன் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஆதரவாக விளம்பரம் செய்து வருகிறார்.
மேலும் சைவ உணவிலேயே, வீகன் வகை உணவு என்றழைக்கப்படும், பால் பொருட்களையும் தவிர்க்கும் உணவுக்கு ஆதரவாக பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள ஹாட் நாயகி சன்னி சைவ உணவாளராக மாறிடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பீட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், சன்னி லியோனின் பேட்டி இடம்பெற்றுள்ளது. அதில், தனக்கு அதிகமாக சக்தி இருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், அதிகமாக காய்கறிகளை சாப்பிட்டு வருவதாகவும் சன்னி கூறியுள்ளார்.
மேலும், இறைச்சி தொழிலில் விலங்குகள் வதைபடுவதுதான் மிகவும் மோசமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.
இதற்க்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு பீட்டாவின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்வு செய்யப்பட்டு பீட்டாவின் நாய் கருத்தடை பிரசாரத்திலும் சன்னி பங்கேற்றுள்ளார்.