இரண்டே நாட்களில் கார்த்தியின் 'சுல்தான்' படைத்த சாதனை..!
இந்த டீசர் இரண்டு நாட்களிலேயே, 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். 'கைதி' படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள இந்த படத்தையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதமே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த போதும், கொரோனா பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படங்களால் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி 'சுல்தான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதலில் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த திரைப்படம், தற்போது தியேட்டர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். கையில் சாட்டையுடன் இருக்கும் கார்த்தியின் புகைப்படத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், இந்த படத்தின் டீசரை படக்குழு சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி முதல் படத்தை தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 'சுல்தான்' படத்தின் டீசர் வெளியானது. மகாபாரத கதை பற்றிய வசனத்துடன் தொடங்கும் டீசர், இறுதியில் “மகாபாரத கதையை போர் இல்லாமல் படிச்சு பாருங்க சார்” என கார்த்தி பேசும் வசனத்துடன் முடிவடைகிறது. தற்போது இந்த டீசர் இரண்டு நாட்களிலேயே, 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.