சிரிக்கக் கூடாது... ஆனா சிரிச்ச மாதிரியே இருக்கணும்... ஆப்ரேஷன் செய்துகொண்ட நடிகைகள்..!
பொதுவாகவே அழகு என்பது பொன் நகையை விட புன்னகையில் தான் உள்ளது என்று அனைவரும் அடித்துக் கூறும் ஆணித்தரமான கருத்து. காரணம் ஒரு பெண் அல்லது ஆண் உச்சி முதல் பாதம் வரை தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டாலும் அவர்கள் முகத்தில் சிரிப்பு இல்லை என்றால் அவர்கள் உண்மையில் அழகாகத் தெரிவதில்லை.
இந்த உண்மையை அறிந்த நடிகைகள் பலர், தாங்கள் எப்போதுமே... சிரிக்கா விட்டாலும் கூட சிரித்தது போல் இருக்க வேண்டும் என தங்களுடைய முகங்களை அழகு படுத்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் போது உதட்டையும் அறுவை சிகிச்சை செய்துகொள்வது வழக்கமாகி விட்டது.
இப்படி அறுவை சிகிச்சை செய்துகொண்ட தமிழ் நடிகைகளும் உள்ளனர். ஆனால் இவ்வாறு அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் பின் விளைவுகள் இருந்தாலும், தங்கள் அழகை மெருகேற்றிக்கொள்ளவும், விளைவை அறிந்தும் ரிஸ்க் எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு சிரிக்காமலேயே, தங்களுடைய உதடுகளை சிரித்த மாதிரி வைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் ஒருவர் நடிகை சமந்தா.
இன்னும் சில நடிகைகள்...
ஸ்ருதிஹாசன்
அனுஷ்கா ஷர்மா
பிரியங்கா சோப்ரா
கத்ரீனா கைப்
ப்ரீத்தி ஜிந்தா
ஷில்பா ஷெட்டி
இதே போல நடிகைகள் பலர் தங்களை மேலும் அழகாக மெருகேற்றிக்கொள்ள பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.