ஏன் திருமணம் செய்ய மறுக்கிறார் தெரியுமா எஸ்.ஜே.சூர்யா? பிரச்னை இதுதானாம் ..!
இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கி மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படம் தற்போது வரை பலருக்கும் பிடித்த படம். இந்த இரு திரைப்படங்கள் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா இயக்குனர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார் இவர்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து இவரே இயக்கி நடிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் வெளிவந்த வியாபாரி, நியூ, இசை போன்ற திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. நடிகனாக சாதிக்க வேண்டும் என சினிமாவில் நுழைந்து இயக்குனராக சாதித்த இவரால் நடிகனாக சாதிக்க முடியவில்லை என மன உளைச்சல் ஏற்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அந்த நேரத்தில் இவருக்குக் கிடைத்த வாய்ப்பு தான் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய இறைவி. இந்தப் படத்தில் இயக்குனராகவே நடித்த இவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற இவர் தற்போது... செல்வராகவன் இயக்கத்தில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் நடிப்பில் சாதித்ததும் திருமணம் என்று கூறினீர்கள்.. ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு பதில் கொடுத்துள்ள இவர் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நான் இன்னும் கால் வாசிகூட சாதிக்கவில்லை. திருமணம் நான் நேசிக்கும் சினிமாத்துறைக்கு தடையாக இருக்கும் என நினைப்பதால், அந்த பிரச்னைக்குள் மாட்டாமல் பிரம்மச்சாரியாக இருப்பதே நல்லது என தோன்றுவதாகக் கூறியுள்ளார்.