பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் மகள், மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதால், இனி சுதா ரகுநாதனுக்கு சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியானது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில் , சுதா ரகுநாதனின் மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் ஒரு வெளிநாட்டுக்காரர். இதனால் பலரும்,சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிருஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 5 நாட்களாகவே, இதுபோன்ற ஏச்சுக்களும், பேச்சுக்களும், சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

அத்துடன் அவது மகள் மாளவிகா திருமணம் செய்துகொள்ளப்போகும், மைக்கேல் என்பவரது நிறத்தையும் குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.அதே நேரத்தில் சுதா ரகுநானுக்கு ஆதரவாகவும் ஏராளமான குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. 

ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதா ரகுநாதன் திருமணத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓஎஸ் அருண் ஆகியோர், கர்நாடக இசையில், கிறிஸ்தவ பாடல்களை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, சுதா ரகுநாதன் குறி வைக்கப்பட்டுள்ளார்.