ஒய்.ஜி மகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா...?? வறுத்தெடுத்த சின்மயி..!!
ஒய் ஜி மகேந்திரன் போன்ற மனிதர்களின் கருத்துக்களை நாம் அனைவரும் பொதுவாக புறக்கணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் .
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ள நடிகர் ஒய் ஜி மகேந்திரனை புறக்கணிக்க வேண்டுமென பாடகி சின்மயி காட்டமாக கருத்து கூறியுள்ளார், அத்துடன் இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது என்றும் அவர் ஒய். ஜி மகேந்திரனை சாடியுள்ளார் . திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குகிறது இச்சட்டம் முஸ்லிம்களின் தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகின்றனர் . இச்சட்டத்திற்கு தமிழகம் , மேற்கு வங்கம் கர்நாடகா , கேரளா , உத்தரப்பிரதேசம் , மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டம் கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக பரவி வருகிறது . இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், மாணவர்களின் போராட்டம் விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவும் பெண்களை சைட் அடிப்பதற்காகவும்தான் நடக்கிறது எனக்கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இது அவர் மீது கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் ஒய் . ஜி மகேந்திரனை பலரும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர் . அவரை நெட்டீசன்கள் கடுமையாக விமர்சித்தும் வரும் நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, ஒய் ஜி மகேந்திரன் போன்ற மனிதர்களின் கருத்துக்களை நாம் அனைவரும் பொதுவாக புறக்கணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் . இவரைப் போன்றவர்களை எல்லாம் மாற்ற முடியாது . அதில் நம் நேரம்தான் விரையம் ஆகும் என அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார் .