நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கெளதம் மேனன் இயக்கத்தில் இணைந்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் பரபரப்பாக நடந்து முடித்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்பாத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நாயகி காயடுலோஹர் இணைய உள்ளாராம். எனவே சிம்புவின் காதல் காட்சிகள், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எடுக்க படலாம் என கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் திருச்சந்தூரிலேயே படப்பிடிப்பு நடைபெற உள்ளதா? அல்லது வேறு இடத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பார்பவர்களையே பிரமிக்க வைக்கும் விதத்தில் இருந்தது... இது சிம்புவா என அவரது ரசிகர்களே கேள்வி எழுப்பும் அளவில் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். பார்ப்பதற்கு மிகவும் சிறியவர் போல காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.