Asianet News TamilAsianet News Tamil

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..! நஷ்டப்படுத்திவிட்டு காசு கேட்கும் சிம்பு..!

simbu red card issue
simbu red card issue
Author
First Published Dec 1, 2017, 3:39 PM IST


நடிகர் சிம்பு சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' .  இந்தப் படத்தில் நடிக்க தனக்கு, சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் சிம்பு மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர் .

simbu red card issue

மேலும் சிம்பு படத்தில் நடிக்க கமிட் ஆனதும் ரூ.2 கோடி அட்வான்சாக பெற்றுக்கொண்டு, படப் பிடிப்பில் சரியாக ஒத்துழைக்காததுடன், அவருடைய இஷ்டத்திற்கு படத்தின் கதையை மாற்றி அமைத்தார் அதன் காரணமாகத் தான் படம் தோல்வியைச் சந்தித்தது என்று கூறியுள்ளனர்.

simbu red card issue

இவர்கள் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சிம்பு , 'AAA ' திரைப்படம் வெளியே வந்துவிட்டது. அது முடிந்து போன கதை. அதனால் இது குறித்து நான் யாருக்கும் பதில் கூற வேண்டிய  அவசியம் இல்லை. முதலில் அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ.3.5 கோடி பணத்தைப் பெற்றுத் தருமாறு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

simbu red card issue

அதே போல் தனக்கு ரெட் கார்டு போட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என தனக்குத் தெரியும் என மிகவும் தைரியமாகப் பேசியுள்ளார். இவர் இப்படிப் பேசி இருந்தாலும் அடுத்ததாக சிம்புவை வைத்து மணிரத்னம் படம் இயக்க உள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்டு போட்டால் அது இவருக்கு மிகப் பெரிய நெருக்கடியை  ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios