Maanaadu 25th Day மாநாடு வெற்றி விழாவில் ஹீரோவை காணோம்!கௌதம் மேனனுக்காக வெங்கட் பிரபுவை புறக்கணித்தாரா சிம்பு?
மாநாடு படத்தின் 5 வது வெற்றி விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் சிம்பு தவிர இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ரசிகர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது. இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றிருந்தது.
இதற்கிடையே மாநாடு இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் விதமாக பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு படத்தின் 5 வது வெற்றி விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் சிம்பு தவிர இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பின்னர் சிம்பு ஏன் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. சிம்பு ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணித்தது காடு என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை, மும்பை, என தொடர்ந்து நடைபெற்று வந்த சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்பு தீவிரமாக நடித்து வருவதால் தான் மாநாடு 25 வது வெற்றி விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.