கமல்ஹாசனை தொடர்ந்து அரசியலுக்கு வர தயாராகும் ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கும் அரசியலில் ஈடுபடும் ஆசை வந்துள்ளதாக கூறியுள்ளதால், இவரும் விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கும் அரசியலில் ஈடுபடும் ஆசை வந்துள்ளதாக கூறியுள்ளதால், இவரும் விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல், இசை, ஆல்பங்கள், உள்ளிட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஸ்ருதி. பாடல்களும் அவரே எழுதி இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில், படங்களில் நடிக்க வில்லை என்றாலும் எப்போதும் பிஸியாகவே இருக்கிறேன். இசை பணிகள் முடிந்த பின் மீண்டும் நடிப்பேன். தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். அதே போல் பாலிவுட் படத்திலும் கமிட் ஆகி உள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து 10 வருடங்களை நடித்து விட்டதால், ஒரு சிறு பிரேக் எடுத்து கொண்டேனே தவிர கதாயாகிகள் போட்டியில் பின் தங்கி விடுவேன் என எப்போதும் பயந்தது இல்லை.
மேலும் என்னுடைய தந்தை அரசியலுக்கு வந்த பின் தனக்கும் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இப்போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆழமாக உற்று பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்சபா என்றால் என்ன என தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
எப்போது என் தந்தைக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபட மாட்டேன். அதற்கான அனுபவம் எனக்கு இல்லை என்பது தான் உண்மை.
என் தந்தை போன்றோர் அரசியலுக்கு வந்தது வரவேற்க தக்க ஒன்று. அவருக்கு சமூக பிரச்சனைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், முதல் பெரியவர்கள் என அனைவரும் ஒரு மாற்றத்தை உருவாக்க ஓட்டு போடுங்கள் என கூறியுள்ளார். இதன் மூலம் ஸ்ருதி தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.