Asianet News TamilAsianet News Tamil

ஜெயஸ்ரீ செய்த இந்த விஷயத்தை சகித்து கொள்ளவே முடியாது..? அவரின் நோக்கம் இது மட்டுமே..! பகீர் கிளப்பும் சீரியல் நடிகர் ஈஸ்வர்..!

சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது, அவருடைய மனைவி ஜெயஸ்ரீ கள்ளக்காதல், மற்றும் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக கூறி, போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

serial actor ishwar meet press about jayasree complaint
Author
Chennai, First Published Dec 4, 2019, 4:37 PM IST

சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது, அவருடைய மனைவி ஜெயஸ்ரீ கள்ளக்காதல், மற்றும் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக கூறி, போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா என இருவருமே, பெயிலில் வெளிவந்துள்ள நிலையில் முதல் வேலையாக நடிகர் ஈஸ்வர், செய்தியாளர்களை சந்தித்து மனைவி ஜெயஸ்ரீயின் புகார் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

serial actor ishwar meet press about jayasree complaint

குறிப்பாக, ஜெயஸ்ரீ குழந்தையை வைத்து கொண்டு பேட்டி கொடுத்துள்ளதை சகித்து கொள்ள முடியாத குற்றம் என்றும், குழந்தைக்கு கடந்த வாரம் முதல், தேவையான அணைத்து வேலைகளையும் செய்து கொடுத்த நான் எப்படி, இப்படி செய்திருக்க முடியும் என மன வேதனையோடு பேசினார்.

serial actor ishwar meet press about jayasree complaint

மேலும் ஜெயஸ்ரீயின் நோக்கம் பணம் மட்டும் தான் என்றும், என்னுடைய அனைத்து பொருட்களும் அவரிடம் தான் உள்ளது. தற்போது நான் வந்திருப்பது கூட தந்தையின் கார் என்றும், தன்னிடம் இருந்து பணம் பார்ப்பதற்காகவே ஜெயஸ்ரீ இப்படி செய்வதாக கூறியுள்ளார். அதே போல் செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஈஸ்வர் தன்னுடைய பக்கம் இருந்த நியாயத்தை எடுத்து கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios