sathiyaraj scolding rajinikanth and kamalahassan

பெரியார்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சத்யராஜ் பெரியாரின் தீவிர ரசிகர்.எங்கு சென்றாலும் பெரியாரின் கொள்கை பற்றி பேசுவார்.எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லி விடும் குணம் கொண்டவர்.

கருத்து

சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களிலிருந்து நடிகர்கள் வரை காவிரி நதிநீர் பங்கிடு தொடர்பான இறுதி தீர்ப்புக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இறுதி தீர்ப்பு

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சத்யராஜ் கலந்து கொண்டு காவிரி இறுதிதீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில்..

திருப்தியில்லை

காவிரி பிரச்சனைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமக்கு திருப்தியில்லை.
இதை 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்று சொல்கின்றனர்.தயவு செய்து அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏதும் முயற்சி செய்யுங்கள்.

காட்டம்

மேலும் பிரபல நடிகர்களாக இருந்தாலே அவர்களுக்கு எல்லாமே தெரியும் என்பதில்லை என்று சத்யராஜ் காட்டமாக பேசியுள்ளார்


ரஜினி ,கமல்
ரஜினி அரசியலுக்கு வந்து விட்டார்.கமலும் வருகிற 21 ம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார்.இந்நிலையில் சத்யராஜ் இவர்கள் இருவரையும் நேரடியாக தாக்கி பேசியுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.