Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ஹூசைனிக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா சசிகலா கணவர்....!!! உண்மை இதோ....!!!

sasikala husband-issue
Author
First Published Dec 17, 2016, 6:31 PM IST


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது பிரபல கராத்தே வீரர் மற்றும் நடிகருமான ஹூசைனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய பணமோசடி மற்றும் கொலை மிரட்டல் குறித்த குற்றச்சாட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முள்ளி வாய்க்கால் முற்றம் என்ற ஈழத்தமிழர்களுக்கான நினைவு முற்றம் தஞ்சாவூரில் நிறுவப்பட உள்ளதாகவும் அதற்கு சிலை வடிக்க வேண்டும் என்று நடராஜன் தன்னிடம் ஆர்டர் செய்ததாகவும் ஹூசைனி கூறியுள்ளார்.

ரூ.75 லட்சம் பெற்றுக்கொண்டு இதற்கான சிலையை தான் வடிவமைத்ததாகவும், ஆனால் மீதி தொகையான ரூ.20 லட்சத்தையும், தனக்கான சம்பளத்தையும் கேட்டதற்கு நடராஜனும் அவருடைய ஆட்களும் தன்னை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் ஹூசைனி குற்றம் சாட்டியுள்ளார்

நடராஜனுடன் எந்த தொடர்பும் அதிமுகவினர் வைத்து கொள்ள கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டதால் முதல்வரின் விசுவாசியான தான் அதன் பின்னர் அவரிடம் வேறு எவ்வித தொடர்பு வைத்து கொள்ளவில்லை என்றும்.

தனக்குரிய மீதி பணத்தை கொடுத்தால் அந்த குறிப்பிட்ட சிலையை மட்டும் முடித்து கொடுக்க தயாராக இருந்ததாகவும் இரண்டு வருடங்களுக்கு முன் ஹூசைனி பேட்டி கொடுத்துள்ளார்.

சசிகலா தற்போது அதிமுகவின் முக்கிய பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில் ஹூசைனி பேட்டியளித்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios