சசிகலா முதலமைச்சர் ஆகா கூடாது என்று தங்களுடைய ட்விட்டர் மூலம், அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தவர்கள் நடிகை குஷ்பூ மாற்றும் ஸ்ரீ பிரியா ஆகிய இருவரும்.
இந்நிலையில் இப்போது சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதை பார்த்து கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதனால் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு.... நடிகை ஸ்ரீ பிரியா தன்னுடைய நன்றிகளை நீதிபதிக்கு தெரிவித்து கொள்ளும் விதத்தில் இரு கரங்கள் கூப்பி நன்றி சொல்லும் படத்தினை பதிவு செய்துள்ளார்.
இதே போல் நடிகை குஷ்பூ... நீதி வென்றுவிட்டது என்றும் இது கொண்டாட கூடிய தருணம் என பதிவிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து நடிகை ராதிகா ... இந்த மெகா சீரியலுக்கு நல்ல போட்டி வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் இவர்கள் அனைவருமே சசிகலா கைது செய்யப்படுவதால் செம கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது மட்டும் புரிகிறது.
