உள்ளத்தை உருக வைக்கும் இசையும் காதலும் சுற்று.. அருளினிக்கு காத்திருந்த சர்ப்பைரஸ் - இந்த வார சரிகமப அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 
 

Sarigamapa This week episode update and surprise mma

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டு நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் இசையும் காதலும் சுற்று நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக இணைந்து பாடல்களை பாட உள்ளனர். போட்டியாளர்களை தனித்தனியாக மதிப்பிட்டு மதிப்பெண் கொடுத்துள்ளனர். 

அந்த வகையில் அருளினி சுத்தி சுத்தி வந்தீங்க என்ற  பாடலை பாடி நடுவர்களை அசர வைத்துள்ளார். அதன் பிறகு சைந்தவி மேடைக்கு வந்து நீ இதெல்லாம் கேட்டயாமே என்று சொல்லி சில பொருட்களை கொடுக்க அதை பார்த்ததும் அம்மா வந்திருக்காங்களா?  அனுப்பிய மாதிரியே இருக்கு என்று சொல்ல அவரது அம்மா என்ட்ரி கொடுத்து 7 வயசு வரை பேசாத அருளினி இணைக்கு பல மொழிகளில் பேசுறா என்று பெருமையாக பேசியுள்ளார். அம்மா மகளின் பாசத்தால் அரங்கமே கண் கலங்கியுள்ளது. 

இதனை தொடர்ந்து உருகி உருகி போனதடி என் உள்ளம் பாடலை பாடி கவர்ந்த ஹமன் வழக்கம் போல அரைகுறை தமிழில் பேசி அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார். உடம்பு முடியாத நிலையில் சிறப்பாக பி[பாடி பாராட்டுகளை பெற்றுள்ளார். 

மரக்காணம் சரண் கோடி அருவி கொட்டுதே என்ற பாடலை பாடி முதல் முறையாக கோல்டன் ஷவரை பெற்றுள்ளார். அதே போல் முகேஷ் மற்றும் பொக்கிஷா ஆகியோர் இணைந்து பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடலை நடுவர்களை கவர்ந்துள்ளனர். 

சரத் சாரங்காவுடன் இணைந்து பூக்கள் பூக்கும் தருணம் பாடலை பாடி அசத்த சரத்தின் திறமையை மீண்டும் நடுவர்கள் சுட்டி காட்டி பாராட்டியுள்ளனர். இப்படி பல நெகிழ்ச்சியான தருணங்களுடன் சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. எனவே சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios